செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில்

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்து விளங்கும் சிவத்தலங்களில் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலும் ஒன்றாகும். பல நூற்றாண்டு பாரம்பரியத்தை கொண்ட இக்கோயில் கட்டப்பட்ட காலத்தில் இருந்து ராஜகோபுரம் இல்லாமலேயே இப்பகுதி மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று வந்தது. இதன்காரணமாக செண்பகவல்லியம்மன் கோயிலுக்கு ராஜகோபுரம் எழுப்ப வேண்டுமென்ற எண்ணமும், ஆவலும் மேலோங்கியது. இதன் வெளிப்பாடாக கடந்த 1999ம் ஆண்டு ராஜகோபுரம் கட்ட தீர்மானிக்கப்பட்டு ராஜகோபுர திருப்பணிகள் துவங்கியது. தொடர்ந்து கோவில்பட்டி நகருக்கு அழகு சேர்க்கும் விதத்தில் தற்போது சுமார் 91அடி உயர ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 1989க்கு பின்னர் சுமார் 24 ஆண்டுகளுக்கு பின்னர் (ஜன.29) மஹாகும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது."

Thursday, April 17, 2014

செண்பகவல்லி அம்மன் கோவிலில் தெப்ப திருவிழா


திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்



செண்பகவல்லி அம்மன் கோவிலில் தெப்ப திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



தெப்பத்திருவிழா


11-ம் திருநாளான நேற்று முன்தினம் இரவில் கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்கம் சார்பில், தெப்ப திருவிழா நடந்தது. தெப்பத்தில் 300-க்கு மேற்பட்ட டேங்கர் லாரிகளின் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டது. தெப்பத்தை சுற்றிலும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டது. மாலையில் ரிஷப வாகனத்தில் சுவாமி- அம்பாள் எழுந்தருளி திருவீதி உலா சென்று, அடைக்கலம்காத்தான் மண்டபத்துக்கு வந்தனர். பின்னர் அங்கு சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது.

பின்னர் மெயின் ரோடு, தெற்கு பஜார் வழியாக சுவாமி- அம்பாள் தெப்பத்தை சென்றடைந்தனர். தொடர்ந்து சுவாமி- அம்பாள் தெப்பத்தில் எழுந்தருளி, 9 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். அப்போது முதல் 3 சுற்றுகளுக்கு மங்கள வாத்தியங்களும், அடுத்த 3 சுற்றுகளுக்கு வேத பாராயணமும், இறுதி 3 சுற்றுகளுக்கு தேவார இன்னிசையும் பாடப்பட்டது. செஞ்சுரி பட்டாசு அதிபர் கணேஷ்பாபு ஏற்பாட்டில் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.

No comments:

Popular Posts

Example

நம: பார்வதி பதயே! ஹர ஹர மஹா தேவா!! தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!