செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில்
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்து விளங்கும் சிவத்தலங்களில் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலும் ஒன்றாகும். பல நூற்றாண்டு பாரம்பரியத்தை கொண்ட இக்கோயில் கட்டப்பட்ட காலத்தில் இருந்து ராஜகோபுரம் இல்லாமலேயே இப்பகுதி மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று வந்தது. இதன்காரணமாக செண்பகவல்லியம்மன் கோயிலுக்கு ராஜகோபுரம் எழுப்ப வேண்டுமென்ற எண்ணமும், ஆவலும் மேலோங்கியது. இதன் வெளிப்பாடாக கடந்த 1999ம் ஆண்டு ராஜகோபுரம் கட்ட தீர்மானிக்கப்பட்டு ராஜகோபுர திருப்பணிகள் துவங்கியது. தொடர்ந்து கோவில்பட்டி நகருக்கு அழகு சேர்க்கும் விதத்தில் தற்போது சுமார் 91அடி உயர ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 1989க்கு பின்னர் சுமார் 24 ஆண்டுகளுக்கு பின்னர் (ஜன.29) மஹாகும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது."
Friday, April 5, 2013
Tuesday, April 2, 2013
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோவிலில் பங்குனி தேர் திருவிழா
ஊர் கூடி தேர் இழுக்க வேண்டும் என்று பெரியோர்கள் சொல்லுவர்கள். காரணம்
ஆண்,பெண் வேறுபாடு இன்றி படித்தோர் , படிக்காதவர் என்று பாகுபாடு இன்றி
பெரியோர் சிறியோர் என்று வயது வரம்பின்றி அனைவரும் இறைவன் முன் சமம்
என்றும் உணர்த்தவே இவ்வாறு கூறினார்கள் .
இங்கே இடம் பிடித்தால் அங்கே இடம் உண்டு
என்று சொல்லுவர்கள் அது என்னனு தெரியுமா!
இங்கே இடம் பிடித்தால் என்றால் தேர் வடம் பிடிப்பதில் இடம் பிடித்தல் என்றும் , அங்கே இடம் உண்டு என்றால் கைலாயத்தில் இடம் உண்டு என்றும் சொல்லி வைத்தார்கள் ஆகையால் நாம் அனைவரும் ஓன்று கூடி வடம் பிடித்து தேர் இழுப்போம் மறுபிறவி இல்லாத பலனை அடைவோம். வாருங்கள்........
இங்கே இடம் பிடித்தால் அங்கே இடம் உண்டு
என்று சொல்லுவர்கள் அது என்னனு தெரியுமா!
இங்கே இடம் பிடித்தால் என்றால் தேர் வடம் பிடிப்பதில் இடம் பிடித்தல் என்றும் , அங்கே இடம் உண்டு என்றால் கைலாயத்தில் இடம் உண்டு என்றும் சொல்லி வைத்தார்கள் ஆகையால் நாம் அனைவரும் ஓன்று கூடி வடம் பிடித்து தேர் இழுப்போம் மறுபிறவி இல்லாத பலனை அடைவோம். வாருங்கள்........
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோவிலில் பங்குனி பெருந்திருவிழா
38-வது ஆண்டு தேரோட்டம் கோலாகலமாக நடைபெற உள்ளது
கோவில்பட்டி
செண்பகவல்லி அம்மன்-பூவனநாத சுவாமி கோவிலில் பங்குனி பெருந்திருவிழா வருகிற பங்குனி 23-ம் (05.04.2013) தேதி
காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது விழா நாட்களில் தினமும் காலையும்,
மாலையும் சுவாமி-அம்பாள் வீதி உலாவும், சிறப்பு தீபாராதனையும் நடைபெறும். விழாவின் 8ம் திருநாளான வருகிற பங்குனி மாதம் 31ம் (13.04.2013) தேதி சனிக்கிழமை
காலை 7 மணிக்கு 38-வது ஆண்டு தேர்த்திருவிழா நடைபெறும்.
இந்த வருடம் தனி சிறப்பாக 37 ஆண்டுகள் மாலையில் நடந்த தேர் திருவிழா இந்த ஆண்டு காலையில் நடைபெறவுள்ளது.
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி . கோ வி ல் ப ட்டி இத்திருக்கோவில் கோவில்பட்டி என்ற இடத்தில் உள்ள...
-
ஸ்ரீசெண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் 26.01.2015 திங்கள்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு கணபதி ஹ...
-
நடராஜர் என்பவர், எல்லாம்வல்ல பரமேஸ்வரனின் மஹேச்வர மூர்த்தங்களில் முதன்மையானவர். அவரே பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவுக்கும் காரண...
-
செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. கோவில்பட்டி செண...
-
கோயில் என்பது மிகவும் புனிதமான இடம். ஆனால், இன்றைய நிலையில் ஆன்மிகம் என்பது... "இந்தக் கோவிலுக்குப் போனால் அது கிடைக்கும்; அந்தக் ...
Example
!doctype>

































