செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில்

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்து விளங்கும் சிவத்தலங்களில் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலும் ஒன்றாகும். பல நூற்றாண்டு பாரம்பரியத்தை கொண்ட இக்கோயில் கட்டப்பட்ட காலத்தில் இருந்து ராஜகோபுரம் இல்லாமலேயே இப்பகுதி மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று வந்தது. இதன்காரணமாக செண்பகவல்லியம்மன் கோயிலுக்கு ராஜகோபுரம் எழுப்ப வேண்டுமென்ற எண்ணமும், ஆவலும் மேலோங்கியது. இதன் வெளிப்பாடாக கடந்த 1999ம் ஆண்டு ராஜகோபுரம் கட்ட தீர்மானிக்கப்பட்டு ராஜகோபுர திருப்பணிகள் துவங்கியது. தொடர்ந்து கோவில்பட்டி நகருக்கு அழகு சேர்க்கும் விதத்தில் தற்போது சுமார் 91அடி உயர ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 1989க்கு பின்னர் சுமார் 24 ஆண்டுகளுக்கு பின்னர் (ஜன.29) மஹாகும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது."

Saturday, January 19, 2013

செண்பகவல்லி அம்மன் கோவிலில் வருஷாபிஷேகம்




செண்பகவல்லி அம்மன் கோவிலில்  வருஷாபிஷேகம்



                                 தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்து விளங்கும் சிவத்தலங்களில் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலும் ஒன்றாகும். பல நூற்றாண்டு பாரம்பரியத்தை கொண்ட இக்கோயில் கட்டப்பட்ட காலத்தில் இருந்து ராஜகோபுரம் இல்லாமலேயே இப்பகுதி மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று வந்தது. இதன்காரணமாக செண்பகவல்லியம்மன் கோயிலுக்கு ராஜகோபுரம் எழுப்ப வேண்டுமென்ற எண்ணமும், ஆவலும் மேலோங்கியது. இதன் வெளிப்பாடாக கடந்த 1999ம் ஆண்டு ராஜகோபுரம் கட்ட தீர்மானிக்கப்பட்டு ராஜகோபுர திருப்பணிகள் துவங்கியது. தொடர்ந்து கோவில்பட்டி நகருக்கு அழகு சேர்க்கும் விதத்தில் சுமார் 91அடி உயர ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு. இதையடுத்து கடந்த 1989க்கு பின்னர் சுமார் 24 ஆண்டுகளுக்கு பிறகு 7 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் அமைக்கப்பட்டு, 2012-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதி மகா கும்பாபிஷேகம் விழா கோலாகலமாக நடைபெற்றது. 

               அதனைத் தொடர்ந்து,  2013-ம் ஆண்டு ஜனவரி 18-ம் வெள்ளிக்கிழமை வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு கணபதி பூஜை, புன்யாகவாசனம், தேவதா அனுக்ஞை, 1008 சங்கு பூஜை, 108 கலச பூஜை, முதல் கால யாகசாலை பூஜை, திரவ்யாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது.











 
          வெள்ளிக்கிழமை  அதிகாலை 6 மணிக்கு மகா கணபதி ஹோமம், 2-ம் கால யாகசாலை பூஜை, திரவ்யாகுதி, பூர்ணாகுதி, யாகசாலை, தீபாராதனை நடைபெற்று,  அதனைத் தொடர்ந்து, காலை 9 மணிக்கு சாலை கோபுரம், விமானங்களுக்கு கும்பாபிஷேகமும் தொடர்ந்து, மூலஸ்தான அம்பாள் சுவாமிக்கு கும்ப அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. 

















          இரவு சுவாமி - அம்பாள் திருவீதியுலா நடைபெற்றது. ஏற்பாடுகளை கோவில் தக்காரும், உதவி ஆணையருமான செல்லத்துரை மற்றும் கோவில் நிர்வாக அலுவலர் கசன்காத்தபெருமாள் ஆகியோர் செய்தனர். திரளான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர். கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., முன்னாள் திருப்பணிக் குழு தலைவர் நாகஜோதி, நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரி நிர்வாக இயக்குனர் கே.ஆர்.அருணாசலம், தொழில் அதிபர்கள் திலகராஜ் ஆறுமுகம், இளங்கோமணி, கோவிந்தராஜன்,  டாக்டர் வேலுச்சாமி,  கட்டளைதாரர் கோவில்பட்டி வேலாயுதம் செட்டியார் குடும்பத்தினர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Popular Posts

Example

நம: பார்வதி பதயே! ஹர ஹர மஹா தேவா!! தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!