செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில்

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்து விளங்கும் சிவத்தலங்களில் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலும் ஒன்றாகும். பல நூற்றாண்டு பாரம்பரியத்தை கொண்ட இக்கோயில் கட்டப்பட்ட காலத்தில் இருந்து ராஜகோபுரம் இல்லாமலேயே இப்பகுதி மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று வந்தது. இதன்காரணமாக செண்பகவல்லியம்மன் கோயிலுக்கு ராஜகோபுரம் எழுப்ப வேண்டுமென்ற எண்ணமும், ஆவலும் மேலோங்கியது. இதன் வெளிப்பாடாக கடந்த 1999ம் ஆண்டு ராஜகோபுரம் கட்ட தீர்மானிக்கப்பட்டு ராஜகோபுர திருப்பணிகள் துவங்கியது. தொடர்ந்து கோவில்பட்டி நகருக்கு அழகு சேர்க்கும் விதத்தில் தற்போது சுமார் 91அடி உயர ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 1989க்கு பின்னர் சுமார் 24 ஆண்டுகளுக்கு பின்னர் (ஜன.29) மஹாகும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது."

Thursday, April 17, 2014

செண்பகவல்லி அம்மன் கோவிலில் பங்குனி தேரோட்டம்


திரளான பக்தர்கள் தரிசனம்


செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஏப்.14- பங்குனி திருவிழா தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 பங்குனி திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் நிகழ்ச்சியான தேரோட்டம் கம்மவார் சங்கம் சார்பில் நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

காலை 8 மணிக்கு சுவாமி- அம்பாள் தேரில் எழுந்தருளினர். 8.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. மூப்பன்பட்டி மாடசாமி குடும்பத்தினர் தேர் தடி போட்டனர். 


திரளான பக்தர்கள், செண்டை மேளம் முழங்க தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ரத வீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் தேர் வந்தது. காலை 10 மணிக்கு தேர் நிலையத்தை வந்தடைந்தது.

தேரோட்டத்தில், கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., கம்மவார் சங்க தலைவர் கனகராஜ், செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் ராமச்சந்திரன், துணை தலைவர் வேல்ராஜ் ஆகியோர் செய்து இருந்தனர்.

தீர்த்தவாரி- தெப்ப திருவிழா

திங்கட்கிழமை ஆயிரவைசிய காசுக்கார செட்டி பிள்ளைகள் சங்கம் சார்பில் மாலை 6 மணிக்கு தீர்த்தவாரி திருவிழா நடக்கிறது.

No comments:

Popular Posts

Example

நம: பார்வதி பதயே! ஹர ஹர மஹா தேவா!! தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!