செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில்

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்து விளங்கும் சிவத்தலங்களில் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலும் ஒன்றாகும். பல நூற்றாண்டு பாரம்பரியத்தை கொண்ட இக்கோயில் கட்டப்பட்ட காலத்தில் இருந்து ராஜகோபுரம் இல்லாமலேயே இப்பகுதி மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று வந்தது. இதன்காரணமாக செண்பகவல்லியம்மன் கோயிலுக்கு ராஜகோபுரம் எழுப்ப வேண்டுமென்ற எண்ணமும், ஆவலும் மேலோங்கியது. இதன் வெளிப்பாடாக கடந்த 1999ம் ஆண்டு ராஜகோபுரம் கட்ட தீர்மானிக்கப்பட்டு ராஜகோபுர திருப்பணிகள் துவங்கியது. தொடர்ந்து கோவில்பட்டி நகருக்கு அழகு சேர்க்கும் விதத்தில் தற்போது சுமார் 91அடி உயர ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 1989க்கு பின்னர் சுமார் 24 ஆண்டுகளுக்கு பின்னர் (ஜன.29) மஹாகும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது."

Wednesday, January 13, 2016

64ம் ஆண்டு வருஷாபிஷேக விழா


                                          நிகழும் மங்களகரமான 1191ம் ஆண்டு மன்மத வருடம் தை மாதம் 2ம் தேதி 16.01.2016 சனிக்கிழமை சப்தமி திதியும், ரேவதி நட்சத்திரமும், சித்தயோகமும் கூடிய சுபயோக சுப தினத்தில் அன்று காலை 10.30 மணிக்கு மேல் 12.00 மணிக்குள் அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை அருள்மிகு பூவனநாத சுவாமி திருக்கோவில் வருஷாபிஷேகம்  நடைபெற உள்ளது.

12.00 மணியளவில் திருகோவிலில் அன்னதானமும்,  இரவு 7.30 மணிக்கு சுவாமி அம்பாள் திருவீதி உலா நடைபெறும்.

அது சமயம் பக்தகோடிகள்  அனைவரும் தவறாது கலந்து கொண்டு சுவாமி அம்பாள் அருள் பெற வேண்டுகிறோம்.

Thursday, January 7, 2016

இரண்டாவது ஆண்டு வருஷாபிஷேக விழா




Popular Posts

Example

நம: பார்வதி பதயே! ஹர ஹர மஹா தேவா!! தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!