செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில்

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்து விளங்கும் சிவத்தலங்களில் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலும் ஒன்றாகும். பல நூற்றாண்டு பாரம்பரியத்தை கொண்ட இக்கோயில் கட்டப்பட்ட காலத்தில் இருந்து ராஜகோபுரம் இல்லாமலேயே இப்பகுதி மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று வந்தது. இதன்காரணமாக செண்பகவல்லியம்மன் கோயிலுக்கு ராஜகோபுரம் எழுப்ப வேண்டுமென்ற எண்ணமும், ஆவலும் மேலோங்கியது. இதன் வெளிப்பாடாக கடந்த 1999ம் ஆண்டு ராஜகோபுரம் கட்ட தீர்மானிக்கப்பட்டு ராஜகோபுர திருப்பணிகள் துவங்கியது. தொடர்ந்து கோவில்பட்டி நகருக்கு அழகு சேர்க்கும் விதத்தில் தற்போது சுமார் 91அடி உயர ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 1989க்கு பின்னர் சுமார் 24 ஆண்டுகளுக்கு பின்னர் (ஜன.29) மஹாகும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது."

Monday, January 30, 2012


24 ஆண்டிற்குப்பின் 
கோலாகலமாக
 நடந்தது.  இதையொட்டி, கடந்த 25ம்தேதி யாகசாலை பூஜை துவங்கியது. சிறப்பு 
பூஜைகளுக்குப்பின், நேற்று காலை 9.05 மணிக்கு, தமிழக நிதிஅமைச்சர் 
பன்னீர்செல்வம் பச்சைக்கொடியசைக்க,

 வேதமந்திரங்கள் முழங்க, சுவாமி, அம்பாள்
 ராஜகோபுர விமான கலசம் மற்றும் பரிவாரமூர்த்திகளின் கலசங்களுக்கு, புனித 
நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. பரசுராம பட்டர் தலைமையில், 100க்கும் 
மேற்பட்ட சிவாச்சாரியார்கள், கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, 
பக்தர்களின் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில், தமிழக தொழிலாளர் 
நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன், அறநிலையத்துறை செயலர் ராஜாராம், 
அறநிலையத்துறை ஆணையர் சந்திரகுமார், தூத்துக்குடி கலெக்டர் ஆஷிஷ்குமார், 
எஸ்.பி.,ராஜேந்திரன், கோயில் செயல் அலுவலர் கசன்காத்த பெருமாள், உதவி 
ஆணையர் வீரராஜன், திருப்பணிக்குழுத் தலைவர் நாகஜோதி, ஏராளமான பக்தர்கள் 
கலந்து கொண்டனர் 

கும்பாபிஷேக படங்கள்
























































7 ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம்

















No comments:

Popular Posts

Example

நம: பார்வதி பதயே! ஹர ஹர மஹா தேவா!! தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!