செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில்

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்து விளங்கும் சிவத்தலங்களில் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலும் ஒன்றாகும். பல நூற்றாண்டு பாரம்பரியத்தை கொண்ட இக்கோயில் கட்டப்பட்ட காலத்தில் இருந்து ராஜகோபுரம் இல்லாமலேயே இப்பகுதி மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று வந்தது. இதன்காரணமாக செண்பகவல்லியம்மன் கோயிலுக்கு ராஜகோபுரம் எழுப்ப வேண்டுமென்ற எண்ணமும், ஆவலும் மேலோங்கியது. இதன் வெளிப்பாடாக கடந்த 1999ம் ஆண்டு ராஜகோபுரம் கட்ட தீர்மானிக்கப்பட்டு ராஜகோபுர திருப்பணிகள் துவங்கியது. தொடர்ந்து கோவில்பட்டி நகருக்கு அழகு சேர்க்கும் விதத்தில் தற்போது சுமார் 91அடி உயர ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 1989க்கு பின்னர் சுமார் 24 ஆண்டுகளுக்கு பின்னர் (ஜன.29) மஹாகும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது."

Wednesday, January 18, 2012

செண்பகவல்லி அம்மன் கோயில் கும்பாபிஷேக பணி







செண்பகவல்லி அம்மன் கோயிலில் 29-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதையொட்டி, அப்பணிகளை கடம்பூர் செ. ராஜு எம்எல்ஏ, நகராட்சித் தலைவி ஜான்சிராணி ஆகியோர் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.   இக்கோயில் சன்னிதி முன்பாக 7 நிலைகளைக்கொண்ட ராஜகோபுரம் அமைக்கும் பணி ரூ. 142 லட்சத்தில் 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்டு நிறைவு பெறும் தருவாயில் உள்ளது.    அதுபோல, சன்னிதி முன்பாக 21 அடி உயர சாலகார கோபுரம் அமைக்கும் பணியும் முடியும் தருவாயில் உள்ளது. மேலும், ரூ. 60 லட்சம் செலவில் கோயில் வளாகத்தில் உள்ள செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி விமானங்கள் புதுப்பித்தல், வர்ணம் பூசுதல், ரூ. 30 லட்சம் செலவில் கீழ ரத வீதி, வடக்கு ரத வீதி, மாட வீதிகளில் சிமென்ட் தளம் அமைத்தல் ஆகிய பணிகளும் நடைபெற்று வருகின்றன.     ரூ. 10 லட்சம் செலவில் கோயில் முன்புறம் மற்றும் பின்புறத்தில் உயர் கோபுர மின்விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.








காந்தி மைதானத்தில் ரூ. 25 லட்சம் செலவில் தளம் அமைக்கும் பணியும் நடைபெறவுள்ளது.     இம்மாதம் 29-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.  அதற்கு ரூ. 60 லட்சம் செலவில் மதிப்பீடு செய்யப்பட்டு, கும்பாபிஷேகத்துக்கான பணியும் நடைபெற்று வருகிறது.    முதல்கட்டமாக, பூவனநாத சுவாமி சன்னிதி முன்புறம் உள்ள காலியிடத்தில் யாகசாலை பூஜைக்காக 70 அடி நீளம், 50 அடி அகலத்தில் யாகசாலை பூஜை நடைபெறும் இடம் அமைக்கப்பட்டு, அதில் 3 நவகுண்டங்கள், 3 ஏக குண்டங்கள், 3 பஞ்சகுண்டங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.     




 
கும்பாபிஷேகப் பணிகளை கடம்பூர் செ. ராஜு எம்எல்ஏ, நகராட்சித் தலைவி ஜான்சிராணி, துணைத் தலைவர் ராமர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.     நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் பக்தர்கள், பொதுமக்கள் வசதிக்காக செய்யவேண்டிய பணிகள், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆலோசித்தனர்.   கோயில் திருப்பணிக் குழுத் தலைவர் நாகஜோதி, கோயில் நிர்வாக அலுவலர் கசன்காத்தபெருமாள், கோயில் தலைமை எழுத்தர் ராமலிங்கம், நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் பழனிச்செல்வம், மருத்துவர்கள் சம்பத், கமலாமாரியம்மாள், அதிமுக நகரச் செயலர் விஜயபாண்டியன், நகர்மன்ற உறுப்பினர்கள் உடன் சென்றனர்.  


No comments:

Popular Posts

Example

நம: பார்வதி பதயே! ஹர ஹர மஹா தேவா!! தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!