செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில்

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்து விளங்கும் சிவத்தலங்களில் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலும் ஒன்றாகும். பல நூற்றாண்டு பாரம்பரியத்தை கொண்ட இக்கோயில் கட்டப்பட்ட காலத்தில் இருந்து ராஜகோபுரம் இல்லாமலேயே இப்பகுதி மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று வந்தது. இதன்காரணமாக செண்பகவல்லியம்மன் கோயிலுக்கு ராஜகோபுரம் எழுப்ப வேண்டுமென்ற எண்ணமும், ஆவலும் மேலோங்கியது. இதன் வெளிப்பாடாக கடந்த 1999ம் ஆண்டு ராஜகோபுரம் கட்ட தீர்மானிக்கப்பட்டு ராஜகோபுர திருப்பணிகள் துவங்கியது. தொடர்ந்து கோவில்பட்டி நகருக்கு அழகு சேர்க்கும் விதத்தில் தற்போது சுமார் 91அடி உயர ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 1989க்கு பின்னர் சுமார் 24 ஆண்டுகளுக்கு பின்னர் (ஜன.29) மஹாகும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது."

Wednesday, September 12, 2012

தீபம் ஏற்றும் முறையும் அதனால் கிடைக்கும் நன்மைகளும்



முதலில் கிழக்கு நோக்கி ஒரு திரியும்
2வது வடக்கு நோக்கி ஒரு திரியும்
3வது மேற்கு நோக்கிஇரு திரியும் ஏற்ற வேண்டும்.தெற்கு நோக்கி தீபம் ஏற்றக்கூடாது.

குளிர்விக்கும் போது,
முதலில் மேற்கே உள்ள திரிகளையும்
2வது வடக்கே உள்ள திரியையும்
3வது கிழக்கே உள்ள திரியையும் குளிர்விக்க வேண்டும்.ஊதி அணைக்கக் கூடாது.அப்படி அணைப்பது சாவுச் சடங்கிற்குச் சமமானது.(நாம் பிறந்த நாள் விழாக்களில் என்ன செய்கிறோம்? என்பதை இப்போது நினைவு கூரவும்.அது மிகவும் தவறான அணுகுமுறை)

மேற்கூறிய முறைப்படி, 8 நாட்களுக்கு தினமும் 1 மணி நேரம் வீதம் நெய்யில்- தாமரை நூல் திரியில் தீபம் ஏற்றி- எரிய விடுவது நமது வீட்டில் உள்ள
வாஸ்து குற்றங்களை சரி செய்யும்.குழந்தைகள் செய்யும் சேஷ்டைகள் குறையும்.
எனது அனுபவத்தில் பிரிந்தவர்கள்- ஒரு போதும் சேரவே வாய்ப்பு இல்லை என நம்பியிருந்தேன்.அவர்கள் இந்த பரிகாரத்தால் ஒன்றிணைந்தனர்.ஆமாம்!!!பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்ந்தனர்.
தீபம் ஏற்றுங்கள்!!! வளமுடன் வாழுங்கள்!!!

No comments:

Popular Posts

Example

நம: பார்வதி பதயே! ஹர ஹர மஹா தேவா!! தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!